உள்ளூர் செய்திகள் (District)

அதிகாரிகள் பஸ்சை ஆய்வு செய்த காட்சி.

ஏர் ஹாரன்கள் பொருத்திய பஸ்களுக்கு அபராதம்

Published On 2023-11-01 07:31 GMT   |   Update On 2023-11-01 07:31 GMT
  • தலா ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது
  • பொக்லைன் எந்திரம் பறிமுதல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பஸ்களில் ஏர் ஹாரன் பொருத்தப்ப ட்டுள்ளதா என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.

தனியார் மற்றும் அரசு பஸ்கள் என மொத்தம் 25 பஸ்களில் சோதனை யிட்டனர்.

இதில் 4 பஸ்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 13 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் குழாய் அகற்றப்பட்டது. பஸ் டிரைவர்களிடம் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டு இருந்தால் ஓட்டுனர் உரிமம் 3மாதம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க ப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் ஒரு வருடம் வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News