உள்ளூர் செய்திகள் (District)

கடைகளில் போலீசார் திடீர் சோதனை

Published On 2023-11-30 07:46 GMT   |   Update On 2023-11-30 07:46 GMT
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை
  • உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம்,காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என காவேரிப்பாக்கம் போலீசார் பள்ளி கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களிடம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Tags:    

Similar News