உள்ளூர் செய்திகள்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்த காட்சி.

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-10-02 09:08 GMT   |   Update On 2022-10-02 09:08 GMT
  • கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரப்பேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கலைவாணி மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினை அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவது குறித்தும், பொதுமக்கள் இந்த முகாமில் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் மணிமாறன் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேரு மருத்துவம், கர்பப்பை, வாய் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு முறிவு, மாற்றுத்திறனா ளிகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் கண் மருத்துவம், கோவிட்-19 சித்த மருத்துவம், தொழு நோய், காச நோய், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவம் அளிக்கப்பட்டது.

இதில் பெரப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள கீழ்வீதி, மகேந்திரவாடி, கோடம்பாக்கம், உளியநல்லூர் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Tags:    

Similar News