உள்ளூர் செய்திகள் (District)

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

Published On 2023-11-21 10:08 GMT   |   Update On 2023-11-21 10:08 GMT
  • கையுறைகள், முகக்கவசம், மழை கோட் வழங்கப்பட்டது
  • 70 பேர் பணியாற்றி வருகின்றனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது.

இந்த பேரூராட்சியில் தூய்மை பணிகளில் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், முகக்கவசம், மழை கோட் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் வழங்கினார்.

அப்போது இளநிலை உதவியாளர் மனோகர், சுகாதார மேற்பார்வையாளர் வினோதினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News