உள்ளூர் செய்திகள் (District)

டிப்பர் லாரி மோதி பம்ப் ஆபரேட்டர் பலி

Published On 2023-11-07 09:22 GMT   |   Update On 2023-11-07 09:22 GMT
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது43). பம்ப் ஆபரேட்டர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ராமச்சந்திரன் உளியநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மீண்டும் மகேந்திரவாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோடம்பாக்கம் - உளிய நல்லூர் கிராம சாலையில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம டைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பாணாவரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமச்சந்திரனை மீட்டு வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து டிரைவர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News