உள்ளூர் செய்திகள் (District)
ஆற்காடு அருகே சாலை பணியாளர்கள் மரக்கன்று நட்டனர்
- முதலமைச்சர் பிறந்த நாள் முன்னிட்டு ஏற்பாடு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு உட்கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் இயக்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருமாள் கலந்து கொண்டு இன்று காலை முப்பது வெட்டி கிராமம் பகுதிக்கு உட்பட்ட செய்யாறு சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஓரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் உட்கோட்ட செயலாளர் கோவிந்தராஜுலு, உட்கோட்ட துணைத் தலைவர்கள் பிரகாஷ், ரகோத்தமன், சீனிவாசன், உட்கோட்ட இணைச்செயலாளர்கள் பவுனு, மணி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விநாயகம், சேட்டு, சம்பத், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் நமச்சிவாயன், லோகநாதன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவி, ரேணு ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.