உள்ளூர் செய்திகள் (District)

ரத்தினகிரி கோவிலில் பக்தர்கள் காவடி ஊர்வலம்

Published On 2023-01-31 09:53 GMT   |   Update On 2023-01-31 09:53 GMT
  • முருகருக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
  • லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பிரசித்திபெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

இந்த கோவி லில் நேற்று தை கிருத் திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். கிருத்திகை முன்னிட்டு வெள்ளிவேல் மற்றும் சேவல் கொடியுடன் வெள்ளி அங்கி அணிந்து சிறப்பு அலங்காரத் தில் வள்ளி, தெய் வானை சமேத முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு பகு திகளில் இருந்து பக் தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதேபோல் ரத்தின கிரி பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Tags:    

Similar News