உள்ளூர் செய்திகள் (District)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன 4.0 தொழில்நுட்பம்

Published On 2023-11-08 07:55 GMT   |   Update On 2023-11-08 07:55 GMT
  • கலெக்டர் வளர்மதி தகவல்
  • 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்பட உள்ளது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் தலா ரூ.34 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4.0 தொழில் நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு 4.0 தொழில்நுட்ப மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை தொழிற் பயிற்சி நிலை யத்தில் குறுகிய கால 4 மாத மற்றும் 3 மாத பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்ப டவுள்ளது.

அதேபோன்று அரக்கோணம் தொழிற் பயிற்சி நிலையத்திலும் வகுப்புகள் விரைவில் நடத்தப்படவுள்ளது.

இந்த தொழில்நுட்ப மையங்களின் மூலம் பயிற்சி பெறும் பயிற்சி யாளர்கள் பயிற்சி முடித்தவுடன் முன்னணி தொழிற்சா லைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் மற்றும் சுயமாக தொழில் தொடங்கவும் பயனுள்ள வகையிலும் இந்த நவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்க பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ராணிப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 4 பாடப் பிரிவுகளின் கீழ் 128 மாணவ மாணவி களும், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 பாடப் பிரிவுகளின் கீழ் 104 மாணவர்களும் என மொத்தமாக 232 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் இந்த 4.0 தொழில் நுட்ப மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News