உள்ளூர் செய்திகள் (District)
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
- உரிமையாளர் கைது
- போலீசார் சோதனையில் சிக்கினர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பஸ் நிலையம் அருகே கண்ணன் பூங்கா எதிரில் உள்ள பெட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆற்காடு தாசில்தார் வசந்தி மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் ஆற்காடு ஆசாத் தெருவை சேர்ந்த தேவராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.