உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.12.50 லட்சம் மோசடி

Published On 2023-04-13 09:29 GMT   |   Update On 2023-04-13 09:29 GMT
  • கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என மணிகண்டன், ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
  • போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது59).

இவருக்கு கோவை நீலிகோனாம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் அறிமுகம் ஆனார்.

ராதாகிருஷ்ணன் கோவை வந்த போது மணிகண்டனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது மகனுக்கு வேலை தேடி வருவதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட மணிகண்டன் தனக்கு கோவை விமான நிலையத்தில் உயர் அதிகாரியுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. சிலருக்கு நான் வேலை வாங்கித் கொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் பணம் கொடுத்தால் நான் கோவை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை ராதாகிருஷ்ணனும் உண்மை என நம்பி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.12.50 லட்சத்தை மணிகண்டனிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்று கொண்ட மணிகண்டன் கூறியபடி வேலையை வாங்கி கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டால் சரியாக பதில் சொல்லவும் இல்லை. இதனால் ராதாகிருஷ்ணன், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்ைதயும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News