உள்ளூர் செய்திகள் (District)

சேலத்தில் வீட்டில் இருந்து மாயமான சிறுமி மீட்பு

Published On 2023-07-14 09:44 GMT   |   Update On 2023-07-14 09:44 GMT
  • சேலம் குகை பகுதியில் வீட்டில் இருந்து மாயமான சிறுமி மாய மானார்.
  • இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது.

சேலம்:

சேலம் குகை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 13 வயது மகள், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென மாய மானார். இதனால் பதட்டம அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். எங்கும் அந்த சிறுமி கிடைக்காததால் இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலையில், அந்த சிறுமியை கொண்டலாம்பட் டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்து போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News