உள்ளூர் செய்திகள்

வனவியல் விரிவாக்க மையத்தில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டபோது எடுத்த படம்.

சேலம் வன மண்டல செயல்பாடுகள் ஆய்வு கூட்டம்

Published On 2022-12-20 07:32 GMT   |   Update On 2022-12-20 07:32 GMT
  • ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
  • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார். சேலம் மண்டல பாது காவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜாங்கம் (நாமக்கல்), கஷ்யப் ஷஷாங் ரவி (சேலம்), சுதாகர்(ஆத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் வனப்பகு–திகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு, மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி வனப்பரப்பை உயர்த்து–வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் மொத்த புவி பரப்பில் 15 சதவீதம் வனப்பரப்பு பகுதியாகும்.

இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முதல் அமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்றிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் மரக்கன்று களை நட்டனர்.

பின்னர் கருத்தியல் விளக்க மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரம் நடும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய தி.மு.க செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி மற்றும் வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News