உள்ளூர் செய்திகள் (District)

தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

தூய்மை பணி முகாம்

Published On 2022-07-15 10:15 GMT   |   Update On 2022-07-15 10:15 GMT
  • ஊராட்சி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் இருந்து வருகின்றன.
  • மேற்கண்ட குப்பை தொட்டிகளை மாதம் ஒருமுறை அகற்றி தூய்மைப்படுத்துவது வழக்கமாகும்.

 திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் குப்பைத்தொட்டியில் தங்கி உள்ள குப்பைகளை வாடகை டிராக்டர் மற்றும் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் இருந்து வருகின்றன. மேற்கண்ட குப்பை தொட்டிகளை மாதம் ஒருமுறை அகற்றி தூய்மைப்படுத்துவது வழக்கமாகும்.

அதுபோல் இம்மாதமும் குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தப்பட்டு ள்ளது ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளாக தரம் பிரித்து கொடுக்கவும் சிலர் குப்பைகளை சாலை ஓரங்களில் வீசுவதும் நீர் நிலைகளின் கரைகளில் நீர்நிலைகளில் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது

இதை தவிர்க்க வேண்டும். கடைக்கு செல்பவர்கள் கேரிப்பையில் பொருட்கள் வாங்காமல் வர கேட்டு க்கொள்ளப்படுவதோடு வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது துணிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News