உள்ளூர் செய்திகள்

கவிப்பிரியன்.

நாகையில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-02-08 09:25 GMT   |   Update On 2023-02-08 09:25 GMT
  • பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடினான்.
  • மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சேர்ந்தவர் இளைய ராஜா பாசமலர் தம்பதியினர். இவர்களின் மகன் கவிப்ரியன்.

இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவிபெறும் வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடியதாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர் கவிப்ரியன் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி உள்ளனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News