உள்ளூர் செய்திகள் (District)

கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

Published On 2023-11-25 05:46 GMT   |   Update On 2023-11-25 05:46 GMT
  • மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.
  • சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

தேனி:

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.

கல்லூரி தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி வரவேற்புரையாற்றினார். சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், உதவி பேராசிரியர் அபர்ணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News