உள்ளூர் செய்திகள்

நெல் மூட்டைகள் ரெயிலில் ஏற்றப்பட்டது.

அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

Published On 2022-11-11 08:03 GMT   |   Update On 2022-11-11 08:04 GMT
  • பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
  • அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News