உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2024-08-10 05:30 GMT   |   Update On 2024-08-10 05:30 GMT
  • வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கடையடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 152 கடைகள் உள்ளன.

இந்த கடைகளானது பல வருடங்களாக குறிப்பிட்ட சில நபர்களிடம் உள்ள நிலையில், அவர்கள் மாதம் தோறும் கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு சில வியாபாரிகள் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் இல்லாத நிலையில் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ள கடை வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கி செலுத்த வேண்டும் எனவும், கடையின் சாவியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குற்றாலநாதர் கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து இன்று குற்றாலம் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை பாக்கி முழுவதையும் செலுத்தி விட்டாலும், கடை சுவாதீன உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும், வாரிசு தாரர்களையும், வாடகை தாரர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடையடைப்பு போராட் டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கோவில் நிர்வாகம் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டாமல் இருந்தால் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News