உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பலியான நாய்

வீட்டிற்குள் சென்ற பாம்பை தடுக்க முயன்று பலியான நாய்

Published On 2022-07-08 09:27 GMT   |   Update On 2022-07-08 09:27 GMT
  • வீட்டிற்குள் சென்ற பாம்பை தடுக்க முயன்ற நாய் பலியானது.
  • நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சரவணன். இவர் செவலை நாய் உள்பட 4 நாய்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து பாம்பை விரட்ட முயன்றுள்ளது. ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்தது. இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிடவே பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செய்தனர்.அப்போது நாய் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.

வீட்டில்புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

Tags:    

Similar News