உள்ளூர் செய்திகள் (District)

அம்பு எய்தல் நிகழ்ச்சி

Published On 2023-10-25 08:28 GMT   |   Update On 2023-10-25 08:28 GMT
  • தேவகோட்டையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
  • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேவகோட்டை

தேவகோட்டை சிவன் கோவில் அருகே மகர் நோன்பு பொட்டலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை நகர் சிவன் கோவிலில் நவராத்திரி விழா முன்னிட்டு தினமும் உற்சவர்கள் வீதி உலா வந்தது. நேற்று இரவு சிவன் கோவில் எதிர்புறம் உள்ள மகர் நோன்பு திடலில் நகர சிவன், வெள்ளையன் ஊரணி ரங்கநாத பெருமாள் கோதண்ட ராமர், கிருஷ்ணர், விநாயகர் குதிரை வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து நேற்று இரவு 5 சுவாமிகளும் ஒன்றினைந்து ஒரே இடத்தில் தனித்தனியாக அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. எய்த அம்புகளை எடுத்துச் சென்றால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தங்குதலையின்றி நடக்கவும் செல்வங்கள் பெருகும் என்று ஐதீகத்தால் பொதுமக்கள் அதனை ஆவலுடன் போட்டி போட்டு அம்புகளை பிடித்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான சுமார்

50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News