உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-06-21 08:22 GMT   |   Update On 2022-06-21 08:22 GMT
  • திருப்பத்தூர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
  • முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் நகர் காவல் நிலையம், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, நாச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள புகார் மனுக்கள் மீதும், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விசாரணைக்கு பின், 53 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் நிலப் பிரச்சினை, சிறு குற்ற வழக்குகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனு அளித்தவர்கள், தொடர்புடையவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்பட்டது. 53 புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News