உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-25 07:11 GMT   |   Update On 2022-07-25 07:11 GMT
  • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
  • கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்மாபட்டியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஜி.ஜே. அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் ஜெயபால், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், திருப்பத்தூர் சகாதேவன், சேது.சிவராமன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சொக்கலிங்கம், மாநில ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.

Tags:    

Similar News