உள்ளூர் செய்திகள் (District)

மாவட்ட அளவிலான நாடகப்போட்டி

Published On 2023-09-01 07:51 GMT   |   Update On 2023-09-01 07:51 GMT
  • மாவட்ட அளவிலான நாடகப்போட்டியில் தேவகோட்டை அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
  • தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவகோட்டை

சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான நாடகப்போட்டி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளி சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் முதல் இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பைச் சார்ந்த எட்வின், பிரியதர்சினி, ஹரிணி, தீபிகா, லில்லிஷிரி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ஆகியோரை இப்பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1500 மற்றும் பள்ளியின் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News