உள்ளூர் செய்திகள் (District)

குதிரையேற்ற பயிற்சி தொடக்க விழா

Published On 2023-09-07 07:59 GMT   |   Update On 2023-09-07 07:59 GMT
  • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் குதிரையேற்ற பயிற்சி தொடக்க விழா நடந்தது.
  • கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி விசாலயன் கோட்டை சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவ னத்தில் சேதுபாஸ்கரா குதிரை ஏற்ற பயிற்சி பள்ளி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லூரி தாளாளர் சேது குமணன் வரவேற்று நினைவு பரிசுகளை வழங்கினார். கவுரவ விருந்தினர்களாக காரைக்குடி 9 -வது தமிழ்நாடு பட்டாலியன் தே.மா.ப கட்டளை அதிகாரி கர்னல் ரஜ்னிஷ் பிரதாப், முன்னாள் அமைச்சர் தென்னவன், கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், கோயம்புத்தூர் அலெக்சாண்டர் குதிரை ஏற்ற கழக நிறுவனர் சக்தி பாலாஜி, கூட்டுறவு பால் உற்பத்தி சங்க தலைவர் சேங்கை மாறன், சிங்கப்பூர் தொழிலதிபர் துவார்.சந்திரசேகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் நெடுஞ்செழியன், குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், தேவகோட்டை நகர செயலாளர் பாலா, திருப்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட மாணவரணி ராஜ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், திருப்புத்தூர் ஒன்றிய இளைஞரணி புதூர்.கண்ணன், பரணி மற்றும் கல்லூரி பேராசி ரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News