உள்ளூர் செய்திகள் (District)

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரிக்கு இஸ்ரேல் பெண் கவிஞர் வருகை

Published On 2023-03-09 07:36 GMT   |   Update On 2023-03-09 07:57 GMT
  • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரிக்கு இஸ்ரேல் பெண் கவிஞர் வருகை தந்தார்.
  • கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

காரைக்குடி

இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற பெண் கவிஞர், கலைஞர் மற்றும் பெண் செயற்பாட்டாளருமான ஜ்மிரா போரான் ஜியான் விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவர் இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றி உள்ளார்.

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன், முதல்வர் கருணாநிதி, ஆலோசகர் தர்மராஜ், கல்லூரி உதவிப்பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை வரவேற்றனர். விழாவில் புதுக்கோட்டை மௌன்ட் ஜியான் சர்வதேச பள்ளியின் அறங்காவலர் ஜோனதன் ஜெயபரதன் கலந்து கொண்டார். பின்பு மாணவர்கள் மத்தியில் ஜ்மிரா போரான் ஜியோன் சிறப்புரையாற்றினார். ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில்தான் இயற்றிய கவிதைகள் சிலவற்றையும் வாசித்து காட்டினார். முடிவில் கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News