கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- சிவகங்கை அருகே கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காளையார் கோவில்
சிவகங்கை மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கே.சொக்க நாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி புரவலருமான தென்னவன தலைமை தாங்கினார்.
தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, காளை யார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோககிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சுப. தமிழரசன் வரவேற்றுப் பேசினார்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, துஷாந்த் பிரதீப் குமார், நாட்டரசன் கோட்டை பேருர் செயலா ளர் ஜெயராமன் ஒன்றிய நிர்வாகிகள் அழகப்பன், கண்ணப்பன், செல்லப்பாண்டி, கண்ணாத்தாள் தென்னரசு, பொருளாளர் கண்ணன், அல்லூர் ரவி, இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன், சுசீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், செல்வராஜ், மையப்ப செட்டியார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.