உள்ளூர் செய்திகள் (District)

மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-11-01 06:49 GMT   |   Update On 2023-11-01 06:49 GMT
  • மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
  • கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு:-

ருக்குமணி: ராஜகம்பீரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் களில் கழிவுகள் அகற்றப்ப டாமல் உள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின் றன. கொசுமருந்து அடிக்கி றார்களா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறை மூலம் கொசுமருந்து அடிப்ப வர்கள் என்னிடம் தெரிவித்தால் எனது வார்டு முழுவ தும் மருந்து அடிக்க வேண் டிய இடங்களை தெரிவிக்கலாம். குடிநீர் பிரச்சனையை யும் தீர்க்க வேண்டும்.

சோமசுந்தரம்: எனது வார்டுக்கு உட்பட்ட ஆவாரங்காடு கிராமத்தில் நெல்களம் அமைத்துத்தர வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைச்சாமி: சூரக்குளம் ஊராட் சியில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி சேதமடைந் துள்ளது. இங்கு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.

முருகேசன்: கீழப்பசலை அரசுப் பள்ளியில் சுற்றுச்சு வர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றன. எனவே பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர் கள் கொசுக்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய ஆணையர் லூயிஸ், கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை வெளி யேற்றவும், கிராமங்கள் முழுவதும் கொசு மருந்து அடிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும். மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நேரடியாக செயல்ப டுத்தக்கூடிய பணிகள் செய்து தரப்படும் என்றார்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

Tags:    

Similar News