உள்ளூர் செய்திகள் (District)

குறைதீர்க்கும் கூட்டத்தில் திட்ட விளக்க கையேட்டினை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார். 

அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை

Published On 2023-09-01 07:53 GMT   |   Update On 2023-09-01 07:53 GMT
  • அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதா வது:-

விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்தி டவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், விவசா யிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நில அளவைத்துறை யினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகை யினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர் திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். இதில் பால்துரை (தேவகோட்டை), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்தி ரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.=

Tags:    

Similar News