உள்ளூர் செய்திகள்

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கட்சி ஆலோசனை கூட்டம்

Published On 2023-08-19 08:30 GMT   |   Update On 2023-08-19 08:30 GMT
  • பேரூராட்சி மன்றத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழைய வணிகவளாக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டும் என்றும், புதிதாக வியா பாரம் தொடங்கு பவர்கள் எங்களுக்கு தான் கடைகளை விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய நிலையில் யாருக்கு கடைகளை விடுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சி னையை வியாபாரிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த காரணத்தினால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டதது. இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி இக்கடை களுக்கான ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) மீண்டும் நடைபெற உள்ள இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதோடு கடைகளை திறக்க ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News