உள்ளூர் செய்திகள்
- மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
- தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் நாளை (13-ந் தேதி) நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.
எனவே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.