உள்ளூர் செய்திகள் (District)

சட்ட பாதுகாப்பு அமைப்புக்கு வக்கீல்கள் தேர்வு

Published On 2023-01-12 09:39 GMT   |   Update On 2023-01-12 09:39 GMT
  • சட்ட பாதுகாப்பு அமைப்புக்கு வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இதனை பொதுமக்களும், வழக்காடிகளும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிவகங்கை

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு) ராஜா அறிவுறுத்தலின்படி இணையதள வழியில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் முற்றிலும் ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட பாதுகாப்பு மற்றும் வழக்கு நடத்தி கொடுக்க தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு திட்டத்தின்படியும், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படியும் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் சட்ட பாதுகாப்பு அமைப்பு ெதாடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர்கள் அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவில் பொறுப்பேற்றனர்.

இந்த விழாவில் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி(பொ) கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் சத்திய நாராயணன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதனை பொதுமக்களும், வழக்காடிகளும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News