உள்ளூர் செய்திகள் (District)

தனியார் பள்ளி ஊழியர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை அதிகாரிகள் எடுத்து கூறினர்.

தனியார் பள்ளி பஸ் டிரைவர், உதவியாளருக்கு எச்சரிக்கை

Published On 2023-07-13 07:25 GMT   |   Update On 2023-07-13 07:25 GMT
  • தனியார் பள்ளி பஸ் டிரைவர், உதவியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • வட்டார போக்குவரத்து அதிகாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள பெரிய கோட்டை தனியார் பள்ளி வாகனம் ஓட்டுனரின் கவன குறைவால் விபத்துக் குள்ளானது. இதில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இறந்தான். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

தற்போது தனியார் பள்ளியில் இயக்கப்படும் வாகனங்கள், மற்றும் ஓட்டுநர்கள், உதவியா ளர்களுக்கு மாணவர்களை கையாளும் விதம், பாது காப்பான பயணம் குறித்து அறிவுரை கூறப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து இனி ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், அரசு விதிமுறை களை ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

அஜாக்கிரதையாக இருந்தால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News