உள்ளூர் செய்திகள் (District)
யோகா பயிற்சி: போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
- யோகா பயிற்சியில் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்றார்.
- மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நேருயுவகேந்திரா முன்னாள் ஒருகிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேருயுவ கேந்திரா, ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாடு, சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் யூத் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் திரளான குழந்தைகள், பெற்றோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட ஒருகிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு யோகா சான்றிதழ் வழங்கினர்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நேருயுவகேந்திரா முன்னாள் ஒருகிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.