உள்ளூர் செய்திகள்

பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி நூற்பாலைகளில் வேலைநிறுத்தம்

Published On 2023-07-16 09:20 GMT   |   Update On 2023-07-16 09:20 GMT
  • வேலைநிறுத்தம் 2-வது நாளாக தொடருகிறது
  • தினமும் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு மற்றும் 10 லட்சம் பேருக்கு வேலையிழப்பு

கருமத்தம்பட்டி,

தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பஞ்சில் இருந்து நூல் எடுத்து ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பஞ்சு இறக்குமதி வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நுாற்பா லைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே துணி களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நுாற்பாலைகள் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும், மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வங்கி கடன் வட்டி விகி தங்களை 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும், துணி வகைகள் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும், அந்நிய துணிகள், நூல் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக நூற்பாலை சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்து இருந்தன. அதன்படி இந்த வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.

தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உண்டு. அவற்றில் 500 ஆலைகள் கோவை மாவட்டத்தில் உள்ளன. அவை நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டு உள்ளன. இத னால் அங்கு நாளொன் றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு தினமும் ரூ.90 கோடி வர்த்த கம் பாதிக்கப் பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நூற்பாலை களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகி ன்றனர்.

இந்த நிலையில் நூற் பாலை களின் வேலைநி றுத்தம் காரண மாக அவர்க ளுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News