உள்ளூர் செய்திகள்
பள்ளி கேட் பூட்டை திறக்க முடியாததால் மாணவர்கள் அவதி
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்தவுடன் கேட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.