உள்ளூர் செய்திகள் (District)

சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன்.

சிதம்பரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

Published On 2023-01-25 08:19 GMT   |   Update On 2023-01-25 08:19 GMT
  • மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது.
  • பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

கடலூர்:

சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் (வயது 57) சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வழக்கம் போல சிதம்பரம் மேல ரதவீதி, கீழ ரத வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போலீஸ் நிலையம் திரும்பினார். அங்கிருந்த காவலர்களிடம் சம்பவத்தை கூறும் பொழுதே மயங்கிய நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள பெஞ்சில் சாய்ந்து விட்டார்.

பணியில் இருந்த போலீசார் அவரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே இறந்து போன சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ஒரு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ், உதவி சுப்பிரண்டு ரகுபதி, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் உட்கோட்ட போலீசார்கள் உயிரிழந்த மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News