உள்ளூர் செய்திகள் (District)
திருத்தணியில் 13 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது
- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது
- ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது.
ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் நிற்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி- 32
பள்ளிப்பட்டு- 15
ஆர்.கே.பேட்டை- 21
சோழவரம்- 80
பொன்னேரி- 60
செங்குன்றம்- 33
ஜமீன்கொரட்டூர்- 36
பூந்தமல்லி- 49
திருவாலங்காடு- 6
பூண்டி- 36
தாமரைப்பாக்கம்- 59
திருவள்ளூர்- 21
ஊத்துக்கோட்டை- 95
ஆவடி- 43