உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: புரோக்கர்கள் 3 பேர் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர்.
- வீட்டில் நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அணைபுதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இதை ஜோசப் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் மசாஜ் சென்டர் பெயரில் அங்கு விபசாரம் நடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அங்கு நடத்திய சோதனையின்போது விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த புரோக்கர்கள் கேரளாவை சேர்ந்த ஜித்தன் (வயது20), ஊழியர்கள் ஸ்ரீஜித் ( 21), ஸ்ரீஜேஸ் (26) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் உள்பட 3 அழகிகளை போலீசார் அங்கிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.