உள்ளூர் செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே எந்திரம் வெடித்ததில் 3 பேர் படுகாயம்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் ஆட்டோ மொபைல்ஸ் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்குள்ள கூலிங் செய்யும் கம்ப்ரசர் எந்திரத்தை சர்வீஸ் செய்யும் பணியில் பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகரை சேர்ந்த சீனிவாசன்(46) அதே பகுதியை சேர்ந்த விநாயக மூர்த்தி(40), கூடுவாஞ்சேரி காந்தி நகரை சேர்ந்த பொன்ராஜ்(45) ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சீனிவாசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை ரும் பொத்தேரிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசஉதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.