உள்ளூர் செய்திகள்

வருகிற 3-ந்தேதி தீரன் சின்னமலை நினைவு நாளில் அ.தி.மு.க. மரியாதை

Published On 2024-07-30 09:25 GMT   |   Update On 2024-07-30 09:25 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
  • கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச்செயலாளர் பி. தங்கமணி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொன்னையன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News