உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உயர்வு

Published On 2022-07-09 04:47 GMT   |   Update On 2022-07-09 04:47 GMT
  • கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.
  • இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது.

ஈரோடு:

பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,088 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News