உள்ளூர் செய்திகள் (District)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,724 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2022-07-10 05:56 GMT   |   Update On 2022-07-10 05:56 GMT
  • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது.
  • இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

ஈரோடு:

பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,724 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் 87 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News