அன்புஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
- குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
- வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம்:
கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி கடந்த 2003-ம் ஆண்டு குண்டலப்புலியூர் வந்தார். அங்கு மன நலம் குன்றியோருக்கு உதவும் பணிகளை செய்து வந்த இவர் 2005-ம் ஆண்டில் அறக்கட்டைளை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து காப்பகம் நடத்தி வந்த ஜூபின் பேபி கடந்த 2021-ம் ஆண்டில் போதை மறு வாழ்வு மையம் என்ற பெயரில் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி பெறாமல் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
காப்பகத்தை அனுமதி பெறாமல் தான் அவர் நடத்தி வந்ததாக தெரிவிக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.