உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் கொலை: சாமியார் வேடத்தில் சுற்றித்திரிந்த மளிகை கடைக்காரர் கைது

Published On 2023-04-16 11:45 GMT   |   Update On 2023-04-16 11:45 GMT
  • குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.
  • கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

குஜிலியம்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.

அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் மணி (23) என்பது தெரிய வந்தது. கருங்குளத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு மற்றொரு வாலிபருடனும் தொடர்பு இருந்தது.

இந்த நிலையில் கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் மூக்காயி, பாலசுப்பிரமணி, பரத்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளரான கொடியரசு மளிகைக்கடை நடத்தி வந்தார். கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சாமியார் வேடத்தில் ஊர் ஊராக சுற்றித் திரிந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு விக்னேஷ் ஆகியோர் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதிக்கு சென்றனர்.

அவரை சுற்றி வளைத்து கைது செய்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News