உள்ளூர் செய்திகள் (District)

எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Published On 2023-02-18 07:40 GMT   |   Update On 2023-02-18 09:47 GMT
  • அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
  • தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 15-ந்தேதி தனது முதல் கட்ட பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் பரப்புரை செய்த அவர் நேற்று தனது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News