உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2023-05-15 06:08 GMT   |   Update On 2023-05-15 06:18 GMT
  • கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
  • நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

திருச்சி:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

* தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

* கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியே ராஜினாமா செய்ய வேண்டும்.

* நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News