உள்ளூர் செய்திகள்
ராமாபுரத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மரணம்
- மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
- தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போரூர்:
சென்னை ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (30). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு மது போதையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். பின்னர் நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தினேஷ் தனது கையை மேலே தூக்கியதாக தெரிகிறது. அப்போது தலைக்கு மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அவரது கை பட்டது.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற ராமாபுரம் போலீசார் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.