உள்ளூர் செய்திகள் (District)

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1159 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

Published On 2022-10-02 09:46 GMT   |   Update On 2022-10-02 09:46 GMT
  • கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.
  • கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அதன் தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

Tags:    

Similar News