உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் ஜமாபந்தி: பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

Published On 2022-06-18 07:54 GMT   |   Update On 2022-06-18 10:31 GMT
  • பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமம்.
  • பொன்னேரி வட்டாட்சியர், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமங்களைச் சேர்ந்த பட்டாதாரர்கள் ஜமாபந்தியில் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக் கொண்டனர். பொது மக்களின் இதர மனுக்களான வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட மனுக்களும் பெறப்பட்டது.

பொன்னேரி, தடப் பெரும்பாக்கம், பழவேற்காடு, கணவன் துறை, மெதூர் திருப்பாலைவனம் அடங்கிய அப்பகுதி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாகவும், விசாரணைக்கு பின் தீர்வு காணக்கூடிய மனுக்களை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News