உள்ளூர் செய்திகள் (District)
கோயம்பேட்டில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த 3 பேர் கைது
- செல்வா, நிசாந்த், அருண் ஆகிய 3 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
- செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோயம்பேடு, வடவேலியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகம்மாள் (75). இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீடு புகுந்து யோகம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர்.இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வா, நிசாந்த், அருண் ஆகிய 3 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர், அண்ணா மெயின் ரோட்டில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியர் ஒருவரிடம் செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.