உள்ளூர் செய்திகள் (District)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,172 கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-10-02 04:18 GMT   |   Update On 2022-10-02 04:18 GMT
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
  • நேற்று 118.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 118.75 அடியானது.

மேட்டூர்:

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 11 ஆயிரத்து 172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 118.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 118.75 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News